20 வருடங்கள் ஐரோப்பாவின் சுவீஸ்,மற்றும் ஜேர்மன் நாடுகளில் வாழ்ந்து தற்போது ஏழு வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்த அனுபவத்துடன் இந்த சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். எமது நோக்கம் எமக்கான தொழிலாகவும் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகள் சிறந்த சேவையை பெறுவதுமே. ஐரோப்பிய அெமேரிக்க கண்டங்களில் வாழும் தாங்கள் இந்தியாவில் எதிர்பார்க்கும் சிறந்த சுற்றுலா தலங்கள். சுத்தமான உணவு, குடிநீர், குளிரூட்டப்பட்ட தங்குமிட வசதிகள், குளிரூட்டப்பட்ட சொகுசு பயண வசதிகள் என்பவற்றை தங்களுக்கு வழங்க காத்திருக்கிறோம். எமது பயண ஏற்பாடுகள் நான்கு வகை பயணத்திட்டங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. தாங்கள் தங்களுக்கு விருப்பமான திட்டங்களில் இணைந்து பயன் பெறலாம். இந்தியாவில் தாங்கள் எங்கு செல்வது எந்த இடங்களை பார்ப்பது என்கின்ற சற்தேகம் இனி தங்களுக்கு வேண்டாம். நாம் அறவிடும் கட்டணம் தாங்கள் தனியாகவோ குடும்பமாகவோ வந்து செலவிடும் பணத்தை விட குறைவானதே. பாதுகாப்பான சுற்றுலா, அளவான கட்டணம், நிறைந்த சேவைக்கு ஹாப்பி டூர்ஸ் இந்தியா
தாங்கள் 12 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக இந்தியா வர விரும்பும் பட்சத்தில் தங்களுக்கென தாங்கள் விரும்பும் விதத்தில் நாம் சுற்றுலா ஏற்பாடுகளை அமைத்துத்தர தயாராகவுள்ளோம். பார்க்கும் இடங்கள் உணவு என்பன தங்களின் விருப்பங்களை கேட்டறிந்து பயணத்திட்டம் தயாரிக்கப்படும்.
தாங்கள் சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கியதிலிருந்து மீண்டும் விமானம் ஏறும் வரை தங்களின் பாதுகாப்பு மற்றும் அனைத்த செலவுகளும் எமது பொறுப்பில். தாங்கள் சரியான இடத்தில் தரமான பொருட்களை மலிவான விலையில் வாங்கிட shopping வசதிகளும் செய்ததரப்படும். எமது பயணத்திட்டம் சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


